பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட இரு பொலிஸார் கைது

Published By: Digital Desk 4

19 Mar, 2019 | 01:12 PM
image

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியரத்னா பொலிஸ் உத்தியோகத்தர் விதான ஆகியோர் இன்று அதிகாலை 5.30மணியளவில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று முந்தினம் புதையல் தோண்டியவர்கள் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைகளுக்குட்படுத்திய பொலிஸாரின் தொலைபேசி ஆய்வு விசாரணைகளின்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று முந்தினம் முதல் முல்லைத்தீவு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கச் செல்லவில்லை. 

இன்று அதிகாலை 5.30மணியளவில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியத்தனா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் விதான ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதையல் தோண்ட முற்பட்ட சந்தேக நபர்கள் ஜவரையும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது 01.04.2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08