பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
பம்லப்பிட்டியில் கடந்த பெர்ரவரி மாதம் 24 ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர, டிபென்டர் ரக வாகனத்தால் மோதி படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், குறித்த டிபெண்டர் ரக வாகனத்தின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தில் தப்பிச்சென்றிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், சாரதி மீண்டும் கைதுசெய்யப்பட்டு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சாரதியை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அடுத்த மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM