பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
பூனேவ, மககும்புகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வேறொரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM