300 ரூபாவுக்காக சிறுவனை தீயினால் சுட்ட பெண்

Published By: Daya

16 Mar, 2019 | 11:36 AM
image

300 ரூபா காணாமல்போனதற்காக 12 வயதான சிறுவனை தீக்காயங்களுக்குள்ளாக்கிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த பெண்ணின் கைப்பையில் 300 ரூபா காணாமல் போனதற்காக 12 வயது சிறுவனை கொள்ளி கட்டையால் அடித்து தீக்காயங்களுக்குள்ளான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அகலவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னஹேன பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான சிறுவனின் தாயார் சிறுவனின் தந்தையை கைவிட்டுச் சென்ற நிலையில், தந்தையார் வேறு ஒருபெண்ணுடன் வாழ்க்கை நடாத்தி வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவைளை, குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளதாகவும் தனது இரு குழந்தைகளையும் விட்டு விட்டு குறித்த சிறுவனின் தந்தையுடன் இணைந்து வாழ்வது தெரியவந்துள்ளது. 

குறித்த பெண்  ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிலையில் மூத்த சகோதரன் வீட்டில் தங்கியிருந்தபோது கைப்பையில் வைத்திருந்த 300 ரூபாவை காணாமல்போன நிலையில் குறித்த சிறுவன் திருடிவிட்டதாக கொள்ளிகட்டையால் தீக்காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த  சிறுவன் தீக்காயங்களுடன் பாடசாலைக்கு சென்றபோது காய்ச்சல் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது. 

சிறுவன் மீது தீக்காயங்களை உண்டாக்கிய பெண்ணை கைதுசெய்துள்ள நிலையில், நீதவான் நிதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48