பங்களாதேஸ் அணியினர் பெரும் ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர்- முகாமையாளர்

Published By: Rajeeban

15 Mar, 2019 | 03:25 PM
image

நியுசிலாந்தில் மசூதியில் தாக்குதல் இடம்பெற்றவேளை பங்களாதேஸ் அணியினர் மசூதிக்கு மிக அருகிலேயேயிருந்தனர் என  அணியின் முகாமையாளர் காலேட் மசூட் தெரிவித்துள்ளார்.

மசூதி தாக்குதலிற்கு பின்னர் செய்தியாளர்களிடம்  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது நாங்கள் ஒருபோதும் எதிர்பாராத உலகத்தின் எந்த பகுதியிலும் இடம்பெறக்கூடாது என எதிர்பார்க்கும் சம்பவம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிஸ்டசாலிகள் என தெரிவித்துள்ள அவர் ஒருசிலரை தவிர ஏனையவர்கள் அனைவரும் பேருந்திலிருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மசூதிக்கு மிக அருகிலிருந்தோம் எங்களால் என்ன நடக்கின்றது என்பதை பார்க்க முடிந்தது எனவும் பங்களாதேஸ் அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்

நாங்கள் மசூதியிலிருந்து 50யார் தொலைவிலிருந்தவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள் என்ற தெரிவிக்கவேண்டும் இரண்டு மூன்று நிமிடங்கள் முன்கூட்டியே நாங்கள் அங்கு சென்றிருந்தால் நாங்கள் தாக்குதல் இடம்பெற்ற வேளை மசூதிக்குள் இருந்திருப்போம் அது பாரிய சம்பவமாகியிருக்கும் எனவும் காலேட் மசூட் தெரிவித்துள்ளார்.

நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்காதது எங்கள் அதிஸ்டமே எனினும் திரைப்படங்களில் பார்த்ததை  நேரில் பார்த்தோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இரத்தக்கறைகளுடன் மக்கள் மசூதியிலிருந்து வெளியே தப்பியோடுவதை பார்த்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள்  முதலில் பேருந்துக்குள் பதுங்கியிருந்தோம் பின்னர் யாராவது பேருந்து மீது தாக்குதலை மேற்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்து வெளியில் இறங்கி ஓடத்தொடங்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59