செவ்வாய்க் கிரகத்துக்கு முதலில் பெண்ணை அனுப்பவுள்ளோம் - நாசா அதிகாரி

Published By: Daya

15 Mar, 2019 | 03:26 PM
image

செவ்வாய்க் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்பவுள்ளதாவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார்.

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா ? என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு இடம்பெற்று வருகின்றது. 

அமெரிக்காவின் நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் முதலில் ஆய்வு நடத்தி வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்று தீவிரமாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

இந்த நிலையில் நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தெரிவித்தபோது,

செவ்வாய்க் கிரக திட்டப் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில்,

“செவ்வாய்க் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்பவுள்ளோம். அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஏனைய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த இரு பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைப்பதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.

குறித்த இரு பெண்களில் ஒருவர் தான் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right