நியுசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சில் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து நியுசிலாந்திற்கான பங்களாதேஸ் அணியின் சுற்றுப்பயணம் கைவிடப்பட்டுள்ளது.
பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் நியுசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் இன்று ஹாக்லி ஓவல் மைதானத்தி;ல் ஆரம்பமாகவிருந்த மூன்றாவது டெஸ்டை கைவிடுவது என தீர்மானித்துள்ளன.
நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் நியுசிலாந்து மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நியுசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் டேவிட் வைட் நான் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன், இருவரும் இந்த சூழலில் கிரிக்கெட் விளையாடுவது பொருத்தமற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தாக்குதல் இடம்பெற்ற மசூதிக்கு தொழுகைக்காக சென்று கொண்டிருந்த பங்களாதேஸ் வீரர்கள் தகவல் அறிந்ததும் வேறு பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளனர்.
தாக்குதல் இடம்பெறுவதை பார்த்ததும் பங்களாதேஸ் அணிவீரர்கள் தங்கள் பேருந்திற்குள்ளேயே இருந்துள்ளனர்
இதன் பின்னர் அவர்கள் பேருந்திலிருந்து இறங்கி ஹக்லி பார்க் ஊடாக மைதானத்திற்கு ஒடிச்சென்றுள்ளனர்.பின்னர் அவர்கள் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM