கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவரை மோதியதாகவும், வீதியில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து லொறியும், சாரதியும் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும், குறித்த விபத்து இரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கிளிநாச்சி போக்குவரத்து பொலிஸ் பொருப்பதிகாரி ஜி எல் ஏ ஜே குணவர்தண தெரிவிக்கின்றார்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM