(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் சி.ஐ.டி.யினர் இன்றைய தினம் 6 மணிநேர விசாரணையை முன்னெடுத்தனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாகவே இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. இன்று மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வக்கு மூலம் பெற்றதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அதன்படி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் குறித்த சம்பவம் தொடர்பில் 14 மணிநேர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மீள விசாரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வசந்த கரன்னாகொடவிடம் 11 பேர் உள்ளடங்கும் இந்த ஐவரையும் கடத்தியமை மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் அறிந்திருந்தும் அதற்கு எதிராக செயற்படாமை தொடர்பில் விஷேடமாக விசாரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வசந்த கரன்னாகொட பல கேள்விகளுக்கு நழுவல் போக்கான பதில்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM