6 மணிநேர விசாரணையில் நழுவல் போக்கான பதில்கள்

Published By: Vishnu

13 Mar, 2019 | 06:11 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் சி.ஐ.டி.யினர் இன்றைய தினம் 6 மணிநேர விசாரணையை முன்னெடுத்தனர். 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பாகவே இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. இன்று மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வக்கு மூலம் பெற்றதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அதன்படி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் குறித்த சம்பவம் தொடர்பில் 14 மணிநேர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மீள விசாரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வசந்த கரன்னாகொடவிடம் 11 பேர் உள்ளடங்கும் இந்த ஐவரையும் கடத்தியமை மற்றும்  சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில்  அறிந்திருந்தும் அதற்கு எதிராக செயற்படாமை தொடர்பில் விஷேடமாக விசாரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வசந்த கரன்னாகொட பல கேள்விகளுக்கு நழுவல் போக்கான பதில்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40