(வாஸ் கூஞ்ஞ)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்திய இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு இந்திய மீனவர்களை நேற்று புதன் கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினர் ஊடாக மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக இன்று வியாழக் கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த இந்திய மீனவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று பிற்பகல் மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னலையில் ஆஐர்படுத்தினர்.
இதையடுத்து குறித்த 6 இந்திய மீனவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,
கஜேந்திரன் வினோத் (26), பூமிநாதன் குணசேகரன் (54),ஜெயராமன் சுரேந்திரன் (27), முருகானந்தன் ஐயன் (25), உதயகுமார் சப்ரி (28), அந்தோனிராஐ் மெசியா (24) ஆகியோரே கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் தெற்கு கரையூரைச் சேர்ந்த மீனவர்களாவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM