அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள்போட்டிகளில் இராணுவத்தினரின் தொப்பிகளை அணிந்துகொள்வதற்கு இந்திய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது என ஐசிசி தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் இராணுவத்தினரின் தொப்பியை அணிந்து விளையாடியமைக்கு பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்தே ஐசிசி இதனை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவுகூருவதற்காகவும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு நிதி திரட்டுவதற்காகவும் இராணுவத்தினரின் தொப்பியை அணிவதற்கான அனுமதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கோரியிருந்தது என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை வழங்கினோம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்திய அணியினர் இராணுவத்தினரின் தொப்பியை பயன்படுத்தியமை குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் கடிதமொன்றை ஐசிசிக்கு அனுப்பியிருந்தது.
ஐசிசியிடமிருந்து அவர்கள் வேறு ஏதோ நோக்கத்திற்காக அனுமதியை பெற்ற பின்னர் அந்த அனுமதியை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தினார்கள் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஈசான் மனி குற்றம்சாட்டியுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM