பொள்ளாச்சி சம்பவம் குற்றவாளிகளிற்கு என்ன தண்டனை? மக்கள் கருத்து

Published By: Rajeeban

12 Mar, 2019 | 03:26 PM
image

தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில்  இளம்பெண்களை அச்சுறுத்தி ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் வன்முறைக்கு உட்படுத்தி வீடியோவில் பதிவு செய்த கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற 27 வயது இளைஞரே இந்த கும்பலின் தலைவராக செயற்பட்டுள்ளார்

திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் இணைந்து சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம் பெண்களை கவர்ந்து பின்னர் அதனை பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்தி மிரட்டி பாலியல் தொல்லை மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதுடன் அதனை படமாக எடுத்துள்ளனர்

குறிப்பிட்;ட கும்பலால் கடந்த ஆறு வருடங்களில் 60ற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியாகிவரும் தகவல்கள் தமிழ் நாட்டை உலுக்கத்தொடங்கியுள்ளன

இந்த விவகாரத்தினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தற்போது உண்மையை தெரிவிக்க தொடங்கியுள்;ளனர்

இது தொடர்பில் வீடியோக்களும் வெளியாகியுள்ளன

இதேவேளை குறிப்பிட்ட கும்பலின் கொடுரமான நடவடிக்கைகள் வெளியானதை தொடர்ந்து மக்கள் சமூக ஊடங்களில் தங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகி;ன்றனர்

பெண்கைள ஈவிரக்கமன்றி சிதைத்த இளைஞர் கும்பலை தூக்கிலிடவேண்டும் ஆகக்கூடிய தண்டனையை வழங்கவேண்டும் என மக்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மிருங்களை விட கேவலமான இந்த நான்கு பேரும் செயற்பட்ட விதம் நெஞ்சை பதைபதைக்கவைக்கின்றது என நடிகர் ஜிவி பிரகாஸ் கருத்து தெரிவித்துள்ளார்

இவர்களை பொதுவெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து என அவர் தெரிவித்துள்ளார்

 

பெண்கள் மற்றும் குழந்தைகளை சீரழித்தவர்களை சும்மாவிடக்கூடாது மரண தண்டனை வழங்கவேண்டும் என முத்து கோபாலகிருஸ்ணன் என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த விவகாரத்தை எதோ ஒரு பிரச்சினை என கருதாமல் தொடர்ந்தும் குரல்கொடுங்கள்  என சமூகஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள அனிபா என்பவர் குற்றவாளிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வரை தொடர்ந்தும் நடவடிக்கை எடுங்கள் இது நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்

இதனை ஏதோ செய்தி என கருதாமல் தொடர்ந்து குரல் கொடுங்கள் என தெரிவித்துள்ள ஒருவர் முகநூல் இல்லாத ஆளேயில்லை அதனை மையமாக வைத்து இந்த கொடுமை நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம் மிகவும்மனிதன்மையற்றது அந்த மிருகங்களை தூக்கில் போடவேண்டும்,அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்,எந்த அரசியல் கட்சியையும் இந்த போராட்டத்தில் அனுமதிக்ககூடாது என நவீன் என்பவர் பதிவு செய்துள்ளார்

உலகெங்கும் கேள்விப்படாத நிகழ்வு பொள்ளாச்சி தொடர்வன்புணர்வு- இது தமிழகத்திற்கு கரும்புள்ளி என  சைமைன் தமிழர் என்பவர் பதிவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52