கல்பிட்டி பாலாவி பிரதான வீதியின் நாச்சிகல்லி பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு அப் பெண்ணின் மகன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தலவில பிரதேசத்தைச் சேர்ந்த மல்லிகா குசும் ஸ்ரீயாவதி (வயது 40) என்ற பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார்.
பாலாவி திசையிலிருந்து கல்பிட்டி திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் அதன் பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த பெண் உயிரிழந்ததோடு முச்சக்கர வண்டியின் சாரதியான அப் பெண்ணின் மகன் காயங்களுடன் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள கல்பிட்டி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM