வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவு திட்டத்தை கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான 2 ஆம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வரவு செலவு திட்ட மீதான 3 ஆம் வாசிப்பின் குழு நிலை விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்த விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு வரை நடைபெறவுள்ளன.
ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரவு செலவு திட்ட 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள குழு நிலை விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சு அலுவலகங்கள், அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 25 விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM