இலங்கையின் விமான படையின் 68 வது வருடநிறைவை முன்னிட்டுசுற்று சூழல் தூய்மையை பேணும் வகையில் சிவனடிபாதமலையில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணியானது இன்று இடம்பெற உள்ளது.
சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான சப்ரகமூவ மாகாண சங்க நாயக்க அவர்களும் ல்மடுல்ல ராஜமகா விகாரையின்காராதிபதியும் ஊவா வெல்லச பல்கலைகழக வேந்தருமான பெங்கமூவ தம்பதின்ன தேரர் அவர்களின் ண்டுகோளிற்கிணங்க இவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதாகவும் விமான படையின் உயர் அதிகாரியான எயா மாசல் கபில ஜெயம்பதி அவர்களின் பணிப்புரையில் இலங்கை விமான படையின் உயர் அதிகாரியான எயா கொமாண்டர் வர்சன குணவர்த்தன அவர்களின் மேற்பார்வையில் விமானபடையை சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் இன்று முதல் ஹட்டன் வழிபாதையில் இருந்து இரத்தினபுரி வழிபாதைவரை சுற்றி சூழல்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் பூஜைகளை நடாத்தி அதன் பின்னர் நல்லதண்ணி சிவனொளிபாதமலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை காணப்படும் கழிவுகள் அனைத்தையும் அகற்றுவதுடன் யாத்திரிகள் இளைப்பாறி செல்லும் சாலைகளுக்கும் வர்ணம் தீட்டும் வேலைகளிலும் ஈடுபட உள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் இதில் ஒரு பகுதியினர் இரத்னபுரி பலாபத்தல வீதியினூடாக சிவனொளிபாதமலையின் உச்சிவரை இவ்வாறான வேலைத்திட்டத்தினை இன்று காலை ஆரம்பித்துள்ளனர் இதனால் சிவனடிபாத மலையில் காணப்படும் சகல கழிவுகளும் அகற்றபடும் என இலங்கை விமான படையின் உயர் அதிகாரி எயா கொமாண்டர் வர்சன குணவர்த்தன அவர்கள் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM