(நா.தினுஷா)
வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கி கொடுப்பது மாத்திரமின்றி வருவாயினை பெற்றுக்கொடுப்பவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கென புலம்பெயர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்க புலமை பரிசில் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 18 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளோம். இதில் அதிகளவான வருமானம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக புலம் பெயர்ந்தவர்களினூடாகவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளுக்கு சென்றதற்கான அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந் நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, பிரதி அமைச்சர் மனுஷ நானயக்கார மற்றும் பாராளுமன்ற உறப்பினர்களான விஜயபால எட்டியாராச்சி, எக்டர் அப்புஹாமி உள்ளிட்டோர் கலந்த கொண்டிருந்தனார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM