(எம்.மனோசித்ரா)
கட்டாரிலிருந்து இலங்கைக்கு தங்க வளையல்களை கடத்த முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு விமான சேவை ஊழியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 10 மணியளவில் கட்டாரிலிருந்து வருகை தந்த விமானத்திற்கூடாக இலங்கையை வந்தடைந்த குறித்த சந்தேகநபரிடம், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பயணப்பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய, இரத்தினபுரியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 4043 கிராம் எடையுடைய, 21 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான, 423 தங்க வளையல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM