காஷ்மீர் மாநிலத்தில் நேற்று வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில், செய்திகள் எதுவுமின்றி வெற்றிடமாக வெளியானது.
காஷ்மீர் மாநிலத்தில், ‘காஷ்மீர் ரீடர்’ மற்றும் ‘கிரேட்டர் காஷ்மீர்’ ஆகிய இரண்டு ஆங்கில நாளிதழ்களும் விற்பனையில் முன்னணி வகிக்கின்றன. இந்நிலையில், இந்த இரண்டு நாளிதழ்களுக்கு வழங்கி வந்த விளம்பரங்களை, எந்த வித அதிகாரப்பூர்வ உத்தரவும் காரணமும் தெரிவிக்காமல், வாய்மொழி உத்தரவு மூலம் ஜம்மு காஷ்மீர் அரசு திடீரென நிறுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ‘காஷ்மீர் எடிட்டர்ஸ் கில்டு’ நாளிதழ், ‘பத்திரிகைகளின் சுதந்திரத்தை மாநில அரசு பறிப்பதுடன், விளம்பர வருமானத்தையும் திட்டமிட்டு தடுக்கிறது’என்று கடுமையாக குற்றம் சாட்டியது.
இந்நிலையில், அரசுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, காஷ்மீரில் நேற்று வெளியான நாளிதழ்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் செய்திகள் ஏதுமின்றி வெற்றிடமாக்கி பிரசுரித்தன. அத்துடன், அனைத்து நாளிதழ்களின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு, ஸ்ரீநகரில் கண்டன பேரணியும் நடத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM