காட்டு யானை தாக்கி ஒருவர் பலி ; மேலும் ஒருவர் படுகாயம்

Published By: Vishnu

11 Mar, 2019 | 10:04 AM
image

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் 17 ஆம் கட்டை புத்தி தசுன்கம பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் மணல்குன்று பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீட் பௌசுல் ஹக் ( வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தில் இருந்து தம்புள்ள பகுதியை நோக்கி இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்த கெப் வாகனம் ஒன்றின் மீது, காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது கெப் வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் தாக்குதல் நடத்திய காட்டு யானை, பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் நடந்த இடத்திலேயே வீழ்ந்து கிடந்துள்ளதுடன், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக வடமேல் மாகாண வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14