புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் 17 ஆம் கட்டை புத்தி தசுன்கம பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் மணல்குன்று பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீட் பௌசுல் ஹக் ( வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளத்தில் இருந்து தம்புள்ள பகுதியை நோக்கி இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்த கெப் வாகனம் ஒன்றின் மீது, காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது கெப் வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தாக்குதல் நடத்திய காட்டு யானை, பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் நடந்த இடத்திலேயே வீழ்ந்து கிடந்துள்ளதுடன், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக வடமேல் மாகாண வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM