62 வருடங்களுக்கு பின் கணவனின் பொய் அம்பலமானதால் விவாகரத்து கோரிய மனைவி

Published By: Digital Desk 4

10 Mar, 2019 | 09:36 PM
image

திருமணம் நடந்ததிலிருந்தே காது கேளாதவர் போல நடித்த கணவரின் செயல் 62 வருடங்களுக்கு பின் அம்பலமானதால் விவாகரத்து செய்ய அவருடைய மனைவி முடிவெடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 84 வயதான பாரி டவ்சன் என்பவர், தனக்கு வரப்போகும் மனைவி டோரத்தி (80) அதிகம் பேசும் சுபாவம் கொண்டவர் என்பதால், அதனை தவிர்க்க தனக்கு காது கேட்காது எனக்கூறியுள்ளார்.

அதனை நம்பி ஏற்றுக்கொண்ட டோரத்தி, கணவனுக்காக 2 ஆண்டுகள் சைகை மொழியை கற்றுக்கொண்டு அதனை வைத்தே கணவனிடம் பேசி வந்துள்ளார்.

ஆனால் நாளடைவில் தனக்கு கண் சரியாக தெரியவில்லை எனக்கூறி பாரி டவ்சன் சமாளித்துள்ளார். வயதான காரணத்தால் கண் தெரியாமல் போயிருக்கலாம் என அவருடைய குடும்பத்தாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு 6 வாரிகள், 13 பேரன், பேத்திகள் உள்ளனர்.

இந்த நிலையில் அன்மையில் ஒரு அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரி, அங்கு இசைக்கேற்றவாறு பாடல் பாடியுள்ளார். அந்த வீடியோவினை அறக்கட்டளை நிர்வாகிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த டோரத்தி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

62 வருடங்களாக கணவர் தன்னை ஏமாற்றியிருப்பதை நினைத்து விவாகரத்து கோரியுள்ளார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பாரி சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பாரி இயல்பிலே மிகவும் அமைதியான குணம் கொண்டவர். ஆனால் அவருடைய மனைவி எரிச்சலூட்டும் வகையில் பேசிக்கொண்டிருப்பார். இந்த விவகாரம் முன்பே தெரிந்திருந்தால் 60 வருடங்களுக்கு முன்பே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்திருப்பார்கள்.

ஆனால் என்னுடைய கட்சிக்காரர் அமைதியாக இருந்ததால் 62 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். தன்னுடைய குடும்பத்திற்காக அவர் இந்த தியாகத்தை செய்திருக்கிறார் என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right