(ரொபட் அன்டனி)
உலக பொருளாதாரத்தில் சீனா அசைக்க முடியாத சக்தியாக உருவாகிவருகின்ற யதார்த்தமே அரசாங்கத்தை சீனாவின் காலடியில் விழ வைத்ததுள்ளதென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேந்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை நிறுத்துவதாகவும் இலங்கை சீனாவின் கொலணியாக மாறியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியினர் கூறியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.
எமது முன்னைய அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்தபோது எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சீனாவை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி இன்று அதன் காலடியில் விழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதனை நாம் ஆராயவேண்டும்.
அதாவது உலக பொருளாதாரத்தில் சீனா அசைக்க முடியாத சக்தியாக உருவாகிவருகின்றது என்ற யதார்த்தமே அரசாங்கத்தை சீனாவின் காலடியில் விழ வைத்தது. இதுதான் யதார்த்தமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM