விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Vishnu

10 Mar, 2019 | 08:51 AM
image

வவுனியாவில் கடந்த மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து வவுனியா கண்டி வீதியில், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தது. 

இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்