மின்சாரம் தாக்கியதில், மேசன் தொழிலாளி பலி

Published By: J.G.Stephan

10 Mar, 2019 | 08:49 AM
image

கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தரான மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி -01, பதுரியா பகுதியில் நேற்றய தினமான சனிக்கிழமை (09.03.2019) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் பிள்ளை ஒருவரின் தந்தையான முஹம்மது அனீஸ் (வயது 29) என்பவரே பலியாகியுள்ளார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர் காத்தான்குடியில் திருமணம் முடித்து அங்கேயே தொழில் புரிந்து வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகள் மிக நெருக்கமாக உள்ள கட்டிடத்தில் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து,  காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10