ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வட மாகாணம் சார்ந்து முன்வைக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை ஆளுநருக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாமென ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதற்கான கடிதம் மேற்குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது கோரிக்கைகளினை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்கமுடியும். இதேவேளை பொதுமக்கள் தமது கோரிக்கைகளினை எதிர்வரும் 13ஆம் திகதி கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் இதற்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கையளிக்க முடியும்.
இதேவேளை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் ஜெனிவாவில் சமர்ப்பிக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை இன்று (09) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் இந்த கோரிக்கை கடிதத்தை ஆளுநர் சார்பாக பெற்றுக் கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM