இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.
‘மெரினா’ என்ற படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அதற்கு பின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர்
இயக்குனர் பாண்டிராஜ். அதன் பிறகு அவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ வெளியான பிறகு, தற்பொழுது ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘நேற்று இன்று நாளை’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் இதனைத் தொடர்ந்து ‘இரும்புத்திரை’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார். அதற்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.
சிவகார்த்திகேயனும், இயக்குனர் பாண்டியராஜும் இணையும் மூன்றாவது படத்திற்கு ரசிகர்களிடத்தில் தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது என்பதும், இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக நடிகர் கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம் ’என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM