வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தீ பரவல்

Published By: Daya

09 Mar, 2019 | 03:22 PM
image

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் இன்று  12.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விபுலானந்த கல்லூரியின் கணினி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.

அதன் பின் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணினி அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த தீ பரவலால் கணினி அறையில் இருந்த கணினிகள் மற்றும் கதிரைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44