வவுனியாவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் மீட்பு: தாய் உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 4

09 Mar, 2019 | 02:37 PM
image

வவுனியாவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் மீட்க்கப்பட்டுள்ள நிலையில் தாய் உட்பட மூவருக்கு எதிர்வரும்  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திலிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவன் ஒருவர் கடந்த   புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக, கனகராயன்குளம் பொலிசில் சிறுவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வெளிநாட்டு முகவர் ஒருவர் தனது குழந்தையை கடத்தியதாகவும், 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு இரண்டுதடவைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் ,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியதாகவும் தாயார் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா,ஓமந்தை, புளியங்குளம் உட்பட பல  பொலிஸ் நிலையங்களிற்கும் தகவல் தெரிவித்துருந்தனர். 

சம்பவம் தொடர்பாக பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா, ஓமந்தையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை நேற்று அதிகாலை புளியங்குளம் பொலிசார் மீட்டனர்., 

குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயார், தாயின் சகோதரர் மற்றும் தாயின் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்றும்  பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைதுசெய்யபட்ட நபர்களை புளியங்குளம் பொலிசார்,  கனகராயன்குளம் பொலிசாரிடம் நேற்று மதியம் ஒப்படைத்துள்ளனர். 

கைதுசெய்யபட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு திங்கள்கிழமை வரை விவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12