ஐக்கியதேசிய கட்சியில் இணைவீர்களா என கேட்பவர்களிற்கு சந்திரிகாவின் பதில் என்ன?

Published By: Rajeeban

09 Mar, 2019 | 11:44 AM
image

ஐக்கியதேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என்னிடம் கேள்வி எழுப்புவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும்   என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நான் ஐக்கியதேசிய கட்சியிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேரப்போவதில்லை என பல தடவை தெரிவித்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கட்சிக்குள் நான் புறக்கணிக்கப்படுவதை காரணம் காண்பித்து என்னை ஐக்கியதேசிய கட்சிக்குள் சேர்ப்பதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே நான் எனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தேன்,நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறும்போது எனது பயணத்தை அந்த கட்சியிலேயே முடித்துக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உரிய முறையில் நிர்வகித்தால், கட்சியின் கிராமிய மட்ட அமைப்புகளை பலப்படுத்தினால் அந்த கட்சியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பின்பற்றுகின்றனர் என்பதற்காக ஏன் நாங்கள் இன்னொரு கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி நாங்கள் மீண்டும் மக்களை கொலை செய்யவேண்டுமா?பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து மீண்டும் ஊழலில் ஈடுபடவேண்டுமா எனவும் சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த நான்கு மாதங்களாக  என்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன ஆனால் எனது மரணம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் நீடிப்பது கஸ்டமானதாக காணப்பட்ட காலத்தில் நாங்கள் மற்றொரு கட்சியை உருவாக்கினோம் ஆனால் ஐக்கியதேசிய கட்சியிலோ அல்லது வேறு கட்சியிலோ இணையவில்லை,நிலைமை சரியான பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தி 17 வருடங்களின் பின்னர் 1994 இல்  ஆட்சியில் அமர்த்தினோம் எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51