(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் இலங்கை குறித்த விவகாரத்தில் இணை அனுசரணை விடயத்தில் சபை முதல்வர் கிரியெல்லவிற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி எம்.பிக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான நேரத்தில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி கேள்வியொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் புதிய பிரேரணை எதனையும் உள்ளடக்க தயாராகின்றதா? கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணை அனுசரணையை ஏற்றுக்கொண்டதைப்போல இம்முறையும் அரசாங்கமாக ஏதேனும் பிரேரணையை ஏற்றுகொள்ள தீர்மானம் எடுத்துள்ளீர்களா? இது குறித்து அமைச்சரவையில் ஏதும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா, பாராளுமன்றத்தில் இதுகுறித்து ஏதும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா? ஏற்கனவே அரசங்கம் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி இறுதியில் இலங்கைக்குள் சர்வதேச நீதிபதிகளை வரவழைத்து குற்ற விசாரணைகளை நடத்தும் நிலைமையே உருவாகியது. ஆகவே மீண்டும் அவ்வாறான இணை அனுசரணை ஒன்றினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போகின்றதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல, இராணுவத்தையோ அல்லது வேறு எவரையுமோ தண்டிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை, அதேபோல் தற்போதைய பிரேரணையை திருத்தி இலங்கைக்கு சாதகமான வகையில் ஒரு பிரேரணையை கொண்டுவருவது குறித்து நாம் சர்வதேச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM