(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் இலங்கையில் வாழும் திருநங்கைகளின் பாதுகப்பிற்கு எடுத்த நடவடிக்கை என்ன? என்னவென மக்கள் விடுதலை முன்னணி சபையில் கேள்வி எழுப்பியது.
பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
பெண்களை பாதுகாக்கும் பெண்களுக்கான நிவாரணங்களை வழங்கும் வரவு செலவு திட்டம் இம்முறை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் பெண்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் பெண்கள். இவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சாலைகளில் அதிகமானவர்கள் பெண்கள், இன்று கடன் பெற்றுள்ளவர்களில் அதிமானவர்கள் பெண்கள். கடன் தொல்லைகளில் அதிகமாக பெண்களே உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? வாழ்வாதாரத்தை பாதுகாக்க வரவு செலவு திட்டத்தில் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் என்ன? எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM