அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்: புதைக்கப்பட்ட நபரை கல்லறையிலிருந்து வெளியே எடுத்த பொலிஸார்..!

Published By: J.G.Stephan

08 Mar, 2019 | 01:23 PM
image

பிரேசில் நாட்டில் இறந்ததாக நினைத்துக்கொண்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீரென உயிருடன் எழுந்து வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவருடைய குடும்பத்தினர் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

அதிகாலையில் திடீரென கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வேலை செய்த நபர் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கல்லறையை உடைத்த போது, உள்ளே அடக்கம் செய்யப்பட்டிருந்த நபர் உயிருடன் எழுந்து வெளியில் வந்துள்ளார்.

ஒரு இரவு முழுவதும் உள்ளே இருந்ததால் அவர் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ளார். அந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்பவில்லை.

தற்போது இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right