இந்து ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலி செயற்பாடுகள் தடைசெய்யப்பட வேண்டும். எங்கள் சமயம் அன்பை போதிக்கின்றது. அன்பு தான் உயர்ந்தது. மற்றவர்களை அன்பாக மதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
அளவெட்டி சைவ வாலிபர் சங்கத்தின் 99 ஆவது ஆண்டு பொதுக் கூட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை மகாஜன சபை மண்டபத்தில் அளவெட்டி சைவ வாலிபர் சங்கத்தலைவர் இ.நாகேந்திரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விலில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பாலான சங்கங்கள் தோன்றி குறிப்பிட்ட காலத்தினுள் அழிந்து விடுகின்றன. ஆனால் அளவெட்டி சைவ வாலிபர் சங்கம் 99 ஆண்டு நிறைவு கண்டு சிறப்பான செயற்பாடுகளினை எமது சமூகத்திற்கு வழங்கி வருகின்றது.சைவத் தமிழோடு தொடர்புபட்ட பல விடயங்கள் அழிந்து கொண்டு செல்கின்றன. சைவத்தின் தொன்மையினை விளங்காதவர்களாக எம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய சூழ்நிலையில் அறநெறி வகுப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று கோவில்களில் தோன்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. பொது நோக்கிற்காக செயற்படு கின்ற தன்மை சமூக மட்டத்தில் குறைவடைந்து செல்கின்றது. நல்ல செயற்பாடுகளினை முன்னெடுக்காமல் தீய செயற்பாடுகளில் ஈடுபடுவது மனவேதனையை ஏற்படுத்துகின்றது.
சைவவாலிபர் சங்கம் எம் மண்ணிற்கு பெருமை தருகின்றது. பல இளைஞர்களை சமயப் பணிசார்ந்து உருவாக்கியுள்ளது. இன்று பல ஆலயங்களில் பக்தர்கள் குறைவடைந்து இயந்திரங்கள் மூலம் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. எமது மதம் சுதந்திரத்தினை கொண்டது.
சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு காரணம் ஆலயங்களில் அறநெறி வகுப்புக்கள் குறைவடைந்து செல்வதேயாகும். எனவே இளம் பிள்ளைகளுக்கு அறநெறிக்கருத்தினை ஊட்ட வேண்டும். இதனூடாக சிறந்த பிரஜைகளாக அவர்கள் திகழ்வார்கள்.
இதேவேளை இந்து ஆலயங்களில் உள்ள மிருகபலி செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும். எங்கள் சமயம் அன்பை போதிக்கின்றது. அன்பு தான் உயர்ந்தது. மற்றவர்களைஅன்பாக மதிக்க வேண்டும். நாங்கள் அதிகாரம் காட்டுவது பண்பற்றது. மற்றவர்களினை மதிப்பவர்களாக இருக்க வேண்டும்.
நீதியற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களினை காப்பாற்றுபவர்களாக தான் இன்று பலர் காணப்படுகின்றார்கள். இது மிக அநாகரிகமான பண்பாகும். இந் நிலைமாற வேண்டும். இதற்கு காரணம் அறநெறி வகுப்புக்கள் குறைவடைந்து செல்வது தான். இளம் பிள்ளைகளுக்கு அறநெறிக் கருத்தினை ஊட்ட வேண்டும்.
எங்களுடைய பண்புகள் பாரம்பரியங்களினை இழக்க முடியாது.சைவ வாலிபர் சங்கம் நீண்ட காலம் இயங்க வேண்டும். சைவ விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்-டும். அத்துடன் பாராட்டு என்பது சிறந்த விடயம். எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்களினை நாம் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM