நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா 

Published By: Priyatharshan

08 Mar, 2019 | 05:28 AM
image

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த அவர் நெடுங்கேணியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஐனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோர் இந்தநாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான  செயலகத்தின் மூலம் போரினால் இடம்பெயர்ந்த  மக்களின் காணிகள் மீளவும் வழங்குவதுடன், அங்கு வீடுகுளை அமைத்து அவர்கள் வாழ்வதற்கு வழியை ஏற்படுத்துவதற்கு பல  நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருவதுடன் அழிவடைந்த  வீதிகள்,கிராமங்கள்,பாடசாலைகளில் உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கும் நாம்  திட்டங்களை வகுத்துள்ளோம்.

வருமானத்தை பெருக்கி சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம்  நாட்டில் வாழும் அனைவரையும் ஒன்றாக்கி நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும் நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய செயலாற்றும்.

குறிப்பாக வடமாகாணத்தில் 43 கிராமங்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு முழுமையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இங்கு நீர் பிரச்சினை அதிகமாக  இருப்பதால் அதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கிறோம்.

வடக்கில் போரின் பின்னர் பல தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமான முறையிலே அதிகவட்டிவீதத்தில் கடன்களை வழங்கியிருக்கிறார்கள். இதனால் பல பெண்கள்மரணமடைந்திருக்கிறார்கள்.

எனவே குறைந்தவட்டி விகிதத்தில் நாங்கள் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வருடவட்டி 6 வீதமாதாகவிருக்கிறது. அதில் 25 வீதத்தை தேசிய  நல்லிணக்கசெயலகம் வழங்கும். 

கடன்களை வழங்குவதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களை வங்கிகள்  பிணையாக கேட்கின்றன. அவ்வாறு  இல்லாமல் குறித்த கடன்தொகையை வழங்குவதற்கு விரைவில்  நடவடிக்கைள் எடுக்கபடும் என அவர் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08