அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தாமெக்சலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2ஆவது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கெனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். 18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியாக கெனெல் அதிகாரியாக இருந்தார்.
2010இல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு அரசியலில் இணைந்த இவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் இருந்தன.
2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 சதவீதம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு நடக்கும் தவறுகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆயுத படைகள் செனட் துணை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
அதில் உறுப்பினராக உள்ள மார்தாமெக்சலி கூட்டத்தில் கலந்து கொண்டபோது, விமானப்படையில் இருந்தபோது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மௌனம் காத்தேன். ஆனாலும் நடந்த சம்பவங்களை சிலரிடம் நான் கூறினேன். ஆயுதப்படைகளில் இது போல நடக்கும் தவறுகளை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM