பிலியந்தலை, திருக்கோவில் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
பிலியந்தலையில் இன்று அதிகாலையில் வேன் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் பெண்ணொருவர் மீது மோதுண்டு விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பாதசாரதி பெண் மற்றும் மோட்டார் சைக்கிளின் சாரதி அக்கறைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பெண் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற ஒருவர் மீது மோதுண்டதில் படுகாயமடைந்த பாதசாரதி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM