இலங்கையில், மீள் குடியமர்த்தல் பணிகள் நன்றாக இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கு 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி அளித்துள்ளோம். 6 மாதத் தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். 32 முகாம்களில் உள்ள மக்களையும் விடுவித்து, அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்." என்று மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் சென்றுள்ள டி.எம்.சுவாமிநாதன் நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவில், 30 ஆண்டுகளாக இலங் கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதில் சிலர் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இலங்கையில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின், இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஜூன் மாதத்திற்குப் பின், இராணுவத்திற்கு தேவையான காணிகள் தவிர ஏனைய காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட, எந்த சிறுபான்மையினர் மீதும் தற்போது தாக்குதல்கள் இடம்பெறுவதில்லை.
இதேவேளை தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி வழங்கப்படும். தமிழக மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் வருவதால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது, சில மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திரும்பி அளிக்கப்படும். இதுதொடர்பாக, இந்தியா -– இலங்கை அரசுகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM