இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்தோர் தொடர்பான ஆட்க்கொணர்வு மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு !

Published By: Digital Desk 3

06 Mar, 2019 | 04:16 PM
image

இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்தோர் தொடர்பான ஆட்க்கொணர்வு  மனுமீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட  ஆட்கொணர்வு மனுமீதான இரண்டாம் கட்ட வழக்கு  விசாரணைகள் இன்றையதினம் விசாரணைக்காக முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தளபதிகளில் ஒருவரான எழிலன் உள்ளிட்ட  11 பேர்  தொடர்பான   ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கடந்த சில  வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட  .நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில் எழிலன் உள்ளிட்ட ஐந்துபேர் தொடர்பான ஆட்க்கொணர்வு  வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் மிகுதியாக உள்ளவர்களின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது .

இந்நிலையில் இன்றையதினம் வழக்கு இலக்கம் 517 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆட்கொணர்வு  மனுதாரர் தனது மகன் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான  தனது சாட்சியத்தை  மன்றுக்கு தெரிவித்தார் . அதாவது தனது  மகன் இறுதிப்போரின்போது வட்டுவாகல் பகுதியில் காயமடைந்த நிலையில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டார் என்றும் பின்னர் தனது  மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் எனவும்  இதுவரையில் தனது மகனை காணவில்லை எனவும் மன்றுக்கு சாட்சியம் அளித்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கபடவேண்டிய ஆவணங்களின் மூலப்பிரதிகள் வழங்குவதற்காக இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

இந்தவழக்கில் மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே .எஸ் ரத்னவேல் அவர்கள் மன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08