சம்பூர் அனல் மின்நிலைய விடயத்தில் இந்தியா மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படும் என நான் நம்புகின்றேன். இந்தியா எமது மக்களுக்கு பல விடயங்களில் உதவி செய்த நாடாகும். எனவே இந்தியாவுடனும் இலங்கை அரசு டனும் பேச்சு நடத்தி இவ்விடயத்தில் நல்ல முடிவை நாம் காண்போம் என எதிர் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.
மூதுாருக்கு விஜயம் செய்த அவர் அனல் மின்நிலயம் தொடர்பாகவும் சம்பூர் அனல் மின்நிலயம் தொடர்பான மக்களின் போராட்டம் குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்
சம்பூர் மக்களின் காணிகள் வடுவிக்கப்படாமல் அவை முதலீட்டுச்சபையினுாடாக தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்தன. அதில் 818 ஏக்கர் காணிகளை முதலில் நாம் விடுவிக்க முடிந்தது. பின்னர் கடற்படையினர் வைத்திருந்த 237 ஏக்கர் காணியையும் படையினரிடமிருந்து விடுவிக்க முடிந்தது.
தற்போது அங்கு இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலயம் அமைக்கப்ட வுள்ளது. அது தொடர்பான பிரச்சனை சிக்கல்கள் மக்களால் முன்வைக்கபட்டு வருகின்றன. இந்த விடயங்களில் எமது மக்களுக்கு பாதிப்புள்ளது. இதில் பல பிரச்சனைகள் உள்ளமை தொடர்பில் மக்கள் விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விடயத்தைப்பொறுத்தவரை இதனை நாம் பக்குவமாகவும் நிதானமாகவும் அணுக வேண்டும். ஏனெனில் இந்தியா இத்திட்டத்தை அமைக்க வுள்ளது. இந்தியா எமக்கு பலவைகையிலும் உதவுகின்ற நாடாகும் . எனினும் மக்கள் இத்திட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்த விடயத்தை இந்தியாவும் ஆராயும் என நான் நம்புகின்றேன். இவ்விடயம் தொடர்பில் நாம் இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடனும் பேசி ஒரு முடிவைக்காண்போம்.
அதற்காக எவரும் அவசரப்படக்கூடாது. ஒருவருடன் கவலையளிக்கும் வகையில் நாம் செயற்பட முடியாது. இந்தியாவின் உதவியை நாம் உதாசினம் செய்ய முடியாது. இந்தியா பல விடயங்களில் பல சந்தர்ப்பங்களில் எமக்குதவியுள்ளது. எனவே எமது மக்கள் நிதானமாக சிந்தித்து பக்குவமாக செயற்பட வேண்டும். இந்தியாவும் இந்த மக்களின் பிரச்சனையை ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்கும் என நான் நம்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM