அமெரிக்காவில் வேறு நபருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
டோட் முலிஸ் என்பவர் தனது மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 10ஆம் திகதி எமி தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற முலிஸ் தனது மனைவி வீட்டில் இறந்துகிடக்கிறார் என்றும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
பின்னர் எமி சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது எமி உடலில் அதிகளவில் காயங்கள் இருந்ததும், இரும்பு கம்பியால் அவர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக முலிஸிடம் பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய நிலையில் மனைவியை அவர் கொன்றது தெரியவந்தது.
எமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த நிலையில் ஏற்பட்ட ஆத்திரத்தில் முலிஸ் அவரை கொன்றது பொலிஸ் விசாரணையின் இருந்து மேலும் தெரியவந்தது.
எமி உயிரிழப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தனது ரகசிய காதலனிடம், நான் முலிஸை ஏமாற்றுவதை அவர் கண்டுப்பிடித்தால் எனக்கு அவரால் எதுவேண்டுமானாலும் நேரலாம்.
நான் உயிரிழந்தால் அதற்கு முலிஸ் தான் காரணமாக இருக்கும் என கூறியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் முலிஸை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முலிஸ் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM