உத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
குறித்த தம்பதியினருக்கு 4 வயதில் ரியா என்கிற மகளும் மற்றும் ஒரு வயதில் தியன்சச்சாஷ் என்கிற மகனும் இருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அனுராதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பணியில் இருந்த மோகித்திற்கு குறித்த தகவல் சென்றடைந்ததும், வீட்டிற்கு செல்கிறேன் என கூறிசென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் அவருடைய இருசக்கர வாகனம் தோட்டத்திற்கு வெளியில் இருப்பதை பார்த்த சிலர், உள்ளே சென்ற போது மோகித் அங்கிருந்த மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM