ஒவ்வொரு அறிவிப்புக்கும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும்- விமான பணிப்பெண்களுக்கு உத்தரவு

Published By: Daya

05 Mar, 2019 | 02:06 PM
image

ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியிடும் போதும் விமான பணிப்பெண்கள் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் இந்திய மக்கள் இடையே தேசப்பற்று உணர்வு அதிகரித்துள்ளது.

இதே உணர்வுகளை விமான பயணிகளிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதன்படி விமான பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பு வெளியிடும் போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும் பயணிகள் எப்படி செயற்பட வேண்டும் என்று விமான பணிப்பெண்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

மேலும் இடையிடையே முக்கியமான தகவல்களை அறிவிப்பாக தெரிவிப்பார்கள். ஊர் நெருங்கியதும் அதுபற்றியும் அறிவிப்புகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அறிவிப்புகளை அவர்கள் கூறி முடிக்கும் போது, ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10