ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியிடும் போதும் விமான பணிப்பெண்கள் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் இந்திய மக்கள் இடையே தேசப்பற்று உணர்வு அதிகரித்துள்ளது.
இதே உணர்வுகளை விமான பயணிகளிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதன்படி விமான பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பு வெளியிடும் போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும் பயணிகள் எப்படி செயற்பட வேண்டும் என்று விமான பணிப்பெண்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
மேலும் இடையிடையே முக்கியமான தகவல்களை அறிவிப்பாக தெரிவிப்பார்கள். ஊர் நெருங்கியதும் அதுபற்றியும் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அறிவிப்புகளை அவர்கள் கூறி முடிக்கும் போது, ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM