மஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் ஏற்படுத்தபட்ட வராந்த ஞாயிறு சந்தையில் மஸ்கெலியா நகர் வர்த்தகர்கள் மட்டுமே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யும் விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யபடுகின்றது. ஆகையால் “இதை வாராந்த சந்தையாக கூற முடியாது” என அங்கு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கிராம புறங்களில் உள்ள சகலருக்கும் இங்கு சந்தை நடைபெறுகின்றது என தெரிந்தால் மட்டுமே அது முறையாக இயங்கும். இதற்கு மஸ்கெலியா பிரதேசசபை முன்வந்து கிராம புறங்களுக்கு அறிவித்தல் வழங்குவதன் மூலம் நுவரெலியா, தலவாகல, கொட்டகல, ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வுட் கினிகத்தேன, நாவலபிட்டிய போன்ற நகரங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்களது பொருட்களை விற்றுவிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை நகரில் பெற்று செல்வர்.
இதனால் நகருக்கு ஏனைய பகுதிமக்கள் வருவதும் அதிகரிக்கும் வர்த்தகர்கள் நன்மையடைவர். பாவனையாளர்களும் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளவர்.
அதனைவிடுத்து நகரில் உள்ளோரே இவ்வாறு வியாபாரம் மேற்கொள்வதன் மூலம் பயனில்லை என பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே இதற்கு சம்மந்தபட்ட மஸ்கெலியா பிரதேசசபை முன்வந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM