ஒரு ஆணால் கூட இவ்வளவு அன்பும், இன்பமும் தர முடியாது": பேயுடன் உறவு வைத்ததை புகைப்படங்களுடாக உறுதிப்படுத்திய யுவதி..!

Published By: J.G.Stephan

03 Mar, 2019 | 03:35 PM
image

நம்மில் சிலருக்கு பேய் இருக்கிறதா.. இல்லையா..? என்பதே மிகப்பெரிய கேள்விக்குரியாக இருக்கிற பொழுது, தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தினமும் பேய்கள் தன்னுடைன் வந்து உடலுறவு வைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார் ஒரு பெண்.. இது மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதை சிசிரிவி வழியாக எடுத்த புகைப்படங்களும் கூட அந்த பெண் வெளியிட்டிருக்கிறார். 

இச்சம்பவம், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமிதிஸ்ட் ரியல்ம் என்னும் பெண்மணி, ஒன்றல்ல இரண்டல்ல. இந்த பெண்மணி கிட்டதட்ட 20 பேய்களுடன் உடலுறுவு கொண்டிருப்பதாகவும் அதை தான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்ததாகவும் அதனால் அந்த பேய்களை தான் காதலிப்பதாகக் குறிப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

இந்த பெண் கடந்த 12 ஆண்டுகளாக பேய்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதோடு தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் பேய்கள் தன்னைக் காதலிப்பதாகவும் தன்மீது மிகுந்த அன்போடு தனக்கு இன்பத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் கூட, இவ்வளவு இன்பமும் அன்பும் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் என்று குறிப்பிடுகிறார்.

இந்த பெண் பேய்களுடன் தான் கொண்ட உறவு பற்றிய முதல் அனுபவத்தைப் பற்றி கூறியதாவது, இவர் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற நபருடன் புதிய வீடு ஒன்றுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் சில அறிகுறிகள் மூலம் அந்த வீட்டில் பேய் இருந்ததை உணர்ந்திருக்கிறார்.

அந்த பெண் தன்னுடைய சக்தி மூலம் பேய் இருப்பதை உணர்ந்ததும் பேய் தன்னைத் தொட முன்வருவதை உணர்ந்திருக்கிறார். அந்த பேய் இவரை நெருங்கியதாகவும் நெருங்கிய உடன் தன்னுடைய தொடையையும் கழுத்துப் பகுதியையும் பிடித்ததாகவும் அதைக் கண்ட நான் பயப்படவில்லை. பாதுகாப்பாகவே உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.

பேய்கள் தன்னைக் காதலித்து அன்பாக நெருங்குவதை நானும் மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பின் தான் பேய்களுக்கும் தனக்கும் உடல் ரீதியான ஈர்ப்பும் உறவும் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் தானும் ஒவ்வொரு முறை பேய்களை உணரும் போதும் தானே பேய்களை உறவு கொள்ள அழைக்கத் தூண்டியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இவ்விடயத்தை கேட்கும் போது, சற்று படபடப்பாக இருந்தாலும், அவர் கைவசம் வைத்துள்ள புகைப்படங்கள் மூலம், குறித்த விடயத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right