இந்தியாவின், காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் இடம்பெற்றுவரும் மோதலில் இரு தீவிரவாதிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரின் பாபாகண்ட் நகரில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற இந்த மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இரண்டு பேர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பொலிஸார் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.
இந் நிலையில் தற்போது 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதுடன் இந்திய தரப்பில் மொத்தம் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM