இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை மேற்கிந்தியத்தீவு அணி 12.1 ஓவர்ளிலேயே வெற்றியீட்டி, அதிரடியாக தொடரை சமன் செய்துள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 கொண்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் தொடரை ஏற்கனவே மேற்கிந்தியத்தீவுகள் அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்க, நான்காவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந் நிலையில் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம் கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியல் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட, பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
பேர்ஸ்டோவ் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காட்ரெலின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரூட்டும் ஒரு ஓட்டத்துடன் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ததஇதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்காக அலெக்ஸ் ஹேல்ஸை மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர் ஈயோன் மோர்கன் ஜோடி சேர்ந்தாட இங்கிலாந்து அணி 10 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களை பெற்றது. மோர்கன் 14 ஓட்டத்துடனும், ஹேல்ஸ் 21 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
எனினும் 10.2 ஆவது ஓவரில் ஹேல்ஸ் 23 ஓட்டத்துடன் பிரித்வெய்டின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் ஷெய் ஹோப்பிடம் பிடிகொடுத்து வெளியேற, மோர்கனும் 13.3 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன் தோமஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததுடுத்து களமிறங்கிய பென்ஸ் ஸ்டோக்ஸ் 15 ஓட்டத்துடனும், மெய்ன் அலி 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்களான கிரிஸ் வோக்ஸ், டோம் கரன், அடில் ரஷித் மற்றும் மார்க் வூட் ஆகியோர் எதுவித ஓட்டங்களுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற நியூஸிலாந்து 28.1 ஓவர்களின் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது.
இதில் இங்கிலாந்து அணியின் இறுதி 5 விக்கெட்டுக்களும் 2 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டமை முக்கிய அம்சமாகும்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் அசத்திய உசேன் தோமஷ் 5 விக்கெட்டுக்களையும், ஹோல்டர் மற்றும் பிரித்வெய்ட் தலா 2 விக்கெட்டுக்களையும், காட்ரெல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 114 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆரம்ப வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் கேம்பொல் ஆகியோர் களமிறங்கினர்.
இங்கிலாந்து அணியின் பந்துகளை பந்தாடிய கிறிஸ் கெயில் ருத்ரதாண்டம் ஆடி ஆறவாது ஓவரின் முடிவில் 19 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசினார்.
எனினும் அவர் 7 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 27 பந்துகளில் 9 ஆறு ஒட்டம் 5 நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளி 77 ஓட்டத்துடன் மார்க்வூட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
மார்க்வூட்டின் இந்த ஓவரில் கிரிஸ் கெயில் 3 ஆறு ஒட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 26 ஓட்டங்களை (6 6 4 4 6 W) விளாசித் தள்ளியமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி 12.1 ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை கடந்தது.
ஆடுகளத்தில் பிராவோ 7 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மயர் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது 2:2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவுபெற்றது.
இவ்விரு அணிகளுக்குமான இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM