திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று பகல் 1.30 மணி வேளையில் குறித்த பகுதியில் தீ பரவியதன் காரணமாக அங்கு 10 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இனந்தெரியாதோரால் குறித்த பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என திம்புள்ள – பத்தனை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
மலையகத்தில் தற்போது காணப்படும் அதிக வெயில் காரணமாக நீர் நிரம்பி காணப்படும் பல பகுதிகளில் கடந்த இரண்டு வாரகாலமாக இவ்வாறு தீ வைப்பதன் காரணமாக குடிநீர்க்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மலையகத்தில் பெரும் பகுதிகளில் குறிப்பாக நோர்வூட், வட்டவளை, தியகல, மஸ்கெலியா போன்ற பிரதேசத்தில் உள்ள காடுகளுக்கு தீ வைப்பது அதிகரித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களின் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM