காணி உரிமைக்கான பேரணி கொழும்பை நோக்கி பயணம்

Published By: Daya

02 Mar, 2019 | 10:38 AM
image

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது.

நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம், இன்று சனிக்கிழமை கொழும்பில் நிறைவடையவுள்ளது.

குறித்த மக்கள் ஊர்வலம் கொழும்பு – புகையிரத நிலையத்திற்கு காலை 10.00 மணியளவில் வந்தடையவுள்ளது.

அதன் பின்னர் அங்கு பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் கையெழுத்து வேட்டையும் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த மக்கள் ஊர்வலத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான குறித்த மக்கள் ஊர்வலம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இம்மக்கள் ஊர்வலம், கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து மன்னாருக்குச் சென்ற குறித்த ஊர்வலம், நேற்று வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து புத்தளம், நீர்கொழும்பு ஊடாக கொழும்மை வந்தடையவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08