சிலைவைக்க ஆசைப்படும் டக்ளஸ் 

Published By: Priyatharshan

11 Apr, 2016 | 10:17 AM
image

துட்­ட­கை­மு­னு­வுக்­கும் எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற யுத்த முடிவில் எல்­லா­ள­னுக்கு துட்­ட­கை­முனு சிலை­ய­மைத்து மரி­யாதை செய்­ததை போன்று, தற்­போது இடம்­பெற்ற யுத்­தத்­திலும் எல்­லா­ள­னுக்கு சிலை­ய­மைத்து நினை­வு­கூர வேண்டும் என்ற பிரே­ர­ணையை பாராளு­மன்­றத்தில் முன்­வைக்கப் போவ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈ.பி.டி.பி.யின் செய­ளாலர் நாய­க­மு­மான கே.என்.டக்­களஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்ளார்.

துட்­ட­கை­மு­னு­வுக்­கும் எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற யுத்த முடிவில் எல்­லா­ள­னுக்கு துட்­ட­கை­முனு சிலை­ய­மைத்து மரி­யாதை செய்­ததை போன்று, தற்­போது இடம்­பெற்ற யுத்­தத்­திலும் எல்­லா­ள­னுக்கு சிலை­ய­மைத்து நினை­வு­கூர வேண்டும் என்ற பிரே­ர­ணையை பாராளு­மன்­றத்தில் முன்­வைக்கப் போவ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈ.பி.டி.பி.யின் செய­ளாலர் நாய­க­மு­மான கே.என்.டக்­களஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தற்போது இடம்­பெற்ற யுத்தில் யார் எல்­லாளன் யார் துட்­ட­கை­முனு என்­பதை மக்­களே அறி­வார்கள் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

யாழ் ஊடக அமை­யத்தில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் இங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த காலங்­களில் குறிப்­பாக இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­துக்கு பின்னர் இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­கள் பல சாத­க­மான சந்­தர்ப்­பங்களை ஏற்­ப­டுத்தி தந்­தி­ருந்த போதும் அவை எத­னையும் தமிழ் தலை­மைகள் சரி­யாக பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மீண்­டு­மொரு சாத­க­மான சமிஞ்சை வழங்­கி­யுள்­ளது.

அதா­வது பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றி­யுள்­ளது. அத்­துடன் அதற்­கான வழி­காட்டல் குழுவில் நானும் ஒர் அங்­கத்­த­வ­னாக உள்ளேன்.

இத்­த­கைய ஒர் நிலையில் அச் சபைக்குள் இருந்து கொண்டு கடந்த காலங்­களில் தமிழ் தலை­மைகள் விட்ட தவறை மீண்டும் விடு­வ­தற்கு நான் அனு­ம­திக்க போவ­தில்லை. இதனை சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும்.

அந்­த­வ­கை­யிலே இது தொடர்­பாக சகல தரப்­பு­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­த­வுள்ளோம். தமிழ் தேசிய கூட்­ட­மைப்புஇ தமிழ் மக்கள் பேரவை உட்­பட அனைத்து தரப்­பு­க­ளு­டனும் பேச­வுள்ளோம். இதன்­படி முதல் கட்­ட­மாக எட்டு அமைப்­பு­க­ளுடன் சந்­திப்­புக்­களை நடாத்­தி­யுள்ளோம்.

இப் புதிய கூட்டை நாம் அமைத்­தி­ருப்பினும் இக் கூட்டின் பொது­வான இணக்­கப்­பாடும் என்­ன­வெனில் புதிய அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள சாத­க­மான சமிஞ்­சையை சரி­யாக பயன்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தீர்­வென்­ப­தற்கு அப்பால் சகல பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்க வேண்டும் என்­பதேயாகும்.

மேலும் அர­சாங்­கத்தால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 65ஆயிரம் வீட்டுத் திட்­டத்தை தவற விட்­டோ­மே­யானால் இனி அது போன்­ற­தொரு வேறு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.

அத்­துடன் இது­வரை காலமும் குடி­சை­க­ளிலும் வெயிலும் மழை­க­ளிலும் கஷ்­ரப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லி­க­மாக ஒரு அரண்­மனை கிடைத்­ததை போன்ற ஒன்­றாகவே இந்த வீடமைப்பு திட்டத்தை நான் பார்க்கின்றேன்.

எனினும் இவ் வீட்­டுத்­திட்டம் பொருத்­த­மற்­றது எமது பண்­பாட்­டுக்கும் கலாச்­சா­ரத்­துக்கும் பொருத்­த­மற்­றது என கூறிக் கொண்­டி­ருப்­ப­வர்கள்இ இந்த புதிய அர­சாங்­கத்தை தாம் தான் கொண்டு வந்­த­தாக கூறு­ப­வர்கள். அர­சாங்கம் அமைய முன்பே பல இர­க­சிய சுற்று பேச்­சுக்­களை நாடாத்­தி­ய­வர்கள்இ முன்­னரே இது தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். இது எமது சூழ­லுக்கு பொருத்­த­மற்­றது பண்­பாட்­டுக்கு பொருத்­த­மற்­றது என அர­சாங்­கத்­துக்கு தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

ஆனால் அதனை விடுத்து அவர்கள் இணக்க அர­சியல் செய்­கின்றோம் என்ற பெயரில் சுய பெரு­மை­யையே அதா­வது எதிர்­கட்சி தலைவர்இ குழுக்­களின் பிரதி தலைவர்இ மாவட்ட இணைத் தலை­வர்கள் என்ற பதவிகளை பெற்றனரே தவிர மக்­களின் பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வை கொடுக்­க­வில்லை. தமது தனிப்­பட்ட நலன்கள் பாதிக்­கப்­படக் கூடாது என்­ப­தற்­காக மொன­மா­கவே உள்­ளனர்.

தற்­போது கூட வட­மா­கா­ண­சபை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­டமே உள்­ளது. ஆனால் அங்கு பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. நாங்கள் இருந்த போது பிரச்­ச­னை­க­ளுக்கு முடி­வு­களை வழங்­கி­யி­ருந்தோம் அல்­லது குறு­கிய காலத்தில் அதற்­கான தீர்­வினை பெற்றுக் கொடுத்­தி­ருந்தோம். ஆனால் இப்­போது பிரச்­ச­னைகள் தொடர்­பாக அறிக்­கை­களை தாருங்கள் நாங்கள் அதனை மத்­திய அர­சாங்­கத்­திடம் வழங்­கு­கின்றோம் என தெரி­விக்­கி­றார்கள்.

அதா­வது இவ­ர்கள் கூறு­வது ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்று கூறுவதைப் போன்ற கதையாகவே உள்ளது.

எனவே தமிழ் தேசிய கூட்­ட­ம­பைப்­பா­னது தமிழ் மக்­க­ளது பிரச்­ச­னைகள் அதா­வது 65ஆயிரம் வீட்­டுத்­திட்ட பிரச்­சனைஇ இந்­திய மீனவர் பிரச்­சனைஇ சம்பூர் பிரச்­சனை தொடர்பில் மக்­க­ளுக்கு உரிய தீர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும் எதிர்­வரும் மாதம் பாரா­ளு­மன்ற அமர்வின் போது நான் தனி­நபர் பிரே­ரனை ஒன்றை முன்­வைக்­க­வுள்ளேன். அதில் போரில் இறந்த உற­வு­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கும் அவர்­க­ளுக்­கான அஞ்­ச­லியை செலுத்­து­வ­தற்­கு­மான ஒர் பொது தினத்­தையும் அதற்­கான பொது இடத்­தையும் உரு­வாக்க வேண்டும் என அப் பிரே­ர­னையில் முக்­கி­யப்­ப­டுத்­த­வுள்ளேன்.

அத்­துடன் அப்­பி­ரே­னை­யூ­டாக வர­லாற்று காலத்தில் துட்­ட­கை­மு­னுக்­குவும் எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற யுத்த முடிவில் கொல்லப்பட்ட எல்லாளனுக்கு துட்டகைமுனு நினைவாலயம் அமைத்து மரியாதை செய்ததை போன்று தற்போது இடம்பெற்ற யுத்தத்திலும் எல்லாளனுக்கு சிலையமைத்து நினைவுகூர வேண்டும் என்பதையும் வலியுறுத்தவுள்ளேன் என்றார்.

இதில் யார் எல்லாளன் யார் துட்டகைமுனு என ஊடகவியலாளர் வினவியதற்குஇ அது தொடர்பாக தற்போதே தெரிவித்தால் அது குறித்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வருவதற்கு தடையாக அமைந்து விடும் எனவும் ஆனால் அது யார் என்பது மக்களுக்கே தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46