வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, தப்பியோடினார் என்ற குற்றச்சாட்டில் பட்டா ரக வாகனச் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டாடர்.
கடந்த 25 ஆம் திகதி இரவு சாவகச்சேரிக்குச் சென்று விட்டு ஏ –9 முதன்மைச் சாலையில் யாழ்ப்பாணம் திரும்பிய மோட்டார் சைக்கிளை கைதடி நுணாவில் பகுதியில் ஒழுங்கையொன்றிலிருந்து முதன்மை வீதிக்கு வந்த பட்டா ரக வாகனம் மோதி 75 மீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
பட்டா ரக வாகனம் சாரதி – காயமடைந்த தம்பதியை அவ்விடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இவர்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கைதடி நுணாவில் ரயர் நிறுவனத்துக்கு அருகில் உள்ள காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கைப்பற்றியதுடன் அதே இடத்தைச் சேர்ந்த சந்தேக நபரையும் என்பவரையும் கைதுசெய்தனர்.
இந் நிலையல் கடந்த 26 ஆம் திகதி அவரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM