செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே இந்துக்களான விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல் முறைமையை பயன்படுத்தி உள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலைப்படைத் தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பதில்லை. இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலகளவில் அதிக தற்கொலைப்படை தாக்குதல்களை இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளே நடத்தியிருந்தனர்.
இதில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்து மத நம்பிக்கையைக் கொண்டவர்கள். ஆனால் மதத்தின் பெயரால் எந்தத் தாக்குதலையும் நடத்திவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தில் விளைவாகவே தாக்குதல்களை நடத்தினர் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம். அதற்கு மதச்சாயம் பூசமுடியாது. ஆனால் இந்தத் தந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான உண்மையான காரணிகளை தேடவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் விமானி இன்றைய தினம் விடுவிக்கப்படுவார் என்று நேற்று பாராளுமன்றத்தில் பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். இதன்போதே விடுதலைப் புலிகளின் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM